அன்பின் வலி இன்னதென்று அறிந்திருக்கிறாயா.
எதனை எதனால் தொலைப்பதென்று
அறியாது காத்திருக்கிறது அந்த பீடம்.
ஒரு குழந்தை தவழும் மடியாய்
ஒரு பூ உதிரும் கிணற்றடியாய்
ஒரு குழந்தையாகவோ
ஒரு பூவாகவோ
தொட்டு விடமாட்டோமாவென்று.
ஏன் அந்தச் சிலந்தியிடம் மாட்டிய
அறியாப் பூச்சியாகக் கூட.
காத்திருப்பின் வலியை நீ உணர்ந்ததேயில்லை.
காற்றாய் நீளும் என் கரங்கள்
எங்கிருந்தோ வந்து உன்னைச் சுற்றி
சுற்றிச் சென்று விடுகிறது.
நுழைவதில்லை நான் உன் சுவாசத்தில்.
நீயாய் என்னை நினைத்து
ஆழப் பெருமூச்சு இழுக்கும்வரை
காத்திருக்கிறேன் நட்சத்திரங்களோடு
நட்சத்திரமாய்க் கலந்து..
எதனை எதனால் தொலைப்பதென்று
அறியாது காத்திருக்கிறது அந்த பீடம்.
ஒரு குழந்தை தவழும் மடியாய்
ஒரு பூ உதிரும் கிணற்றடியாய்
ஒரு குழந்தையாகவோ
ஒரு பூவாகவோ
தொட்டு விடமாட்டோமாவென்று.
ஏன் அந்தச் சிலந்தியிடம் மாட்டிய
அறியாப் பூச்சியாகக் கூட.
காத்திருப்பின் வலியை நீ உணர்ந்ததேயில்லை.
காற்றாய் நீளும் என் கரங்கள்
எங்கிருந்தோ வந்து உன்னைச் சுற்றி
சுற்றிச் சென்று விடுகிறது.
நுழைவதில்லை நான் உன் சுவாசத்தில்.
நீயாய் என்னை நினைத்து
ஆழப் பெருமூச்சு இழுக்கும்வரை
காத்திருக்கிறேன் நட்சத்திரங்களோடு
நட்சத்திரமாய்க் கலந்து..