எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 நவம்பர், 2012

கதிர் விரித்தல்.

விரியனாய் தினம்
காத்திரமாய்க்
கதிர் விரித்துக்
கடித்துச் செல்கிறது
இருள் பொந்திலிருந்து
ஓசோன் கிழித்து
வெளிப்படும் விஷச் சூரியன்

திங்கள், 5 நவம்பர், 2012

அபிப்ராயங்கள்

அபிப்ராயங்கள்:-
*********************
கால்களற்றவன்
கைச்சக்கரங்களால்
கடந்துபோய்க்கொண்டிருக்கிறான்.


கண்கள்வழி
கருணை கசிந்துவிடாதிருக்கவும்
புன்முறுவல் பொங்கிவிடாதிருக்கவும்

யத்தனிக்கிறேன்.

கடுமையான பாவனைகளால்
கல்லாகிறது முகம்.,
அவனை எந்த விதத்திலும்
காயப்படுத்தாத சந்தோஷத்துடன்.

யதார்த்தமாய்க் கடக்கும் அவன்
யோசித்தபடி செல்கிறான்.,
முறுவல்கள்கூட அற்ற முகம்..
பாவம் என்ன பிரச்சனையோ..

வெள்ளி, 2 நவம்பர், 2012

ஜிமிக்கி

கண்கள் விரிய எத்தனை காலம்தான் காத்திருப்பது..
காதல் கணவா வந்து விடு சீக்கிரம் அலுவலகத்திலிருந்து
காத்துக் காத்து கண்ணுக்குக்குள் ஒரு பூவாய்ப் பூக்கிறாய்..
காற்றாய் சுழல்கிறாய் என் கழல் சுழற்றி..
வாசனையாக் கரைந்து கொண்டிருக்கிறேன்..
வயதாகிக் கொண்டிருக்கிறது எனக்கும் என் ஜிமிக்கும்கூட..:)

வியாழன், 1 நவம்பர், 2012

தீர்க்கமுடியாதவை..

தீர்க்கமுடியாதவை:-
***************************
 
தேத்தண்ணியும் காப்பித்தண்ணியும்
கலந்த சீனிப் பானையாய்
பெருத்துக் கிடக்கிறது வயிறு
 
ஊர்விட்டு ஊர்மாறும்
அட்டைப் பெட்டிகளால்
நிரம்பிக்கிடக்கிறது வீடு.
 
தண்ணீர்க் குழாய்களாலும்
சாக்கடைப் பள்ளங்களாலும்
பிளந்து கிடக்கிறது சாலை.
 
சுயநல அணைகளாலும்
அணு ஆலைகளாலும்
பிளவுபட்டுக் கிடக்கிறது ஊர்.

சோகக் கவிதை

துக்கமும் சாவும்
ஓவியமாகவே  பதிகிறது
ஓவியக்காரனுக்கு
சோகக் கவிதையாகவே
புலம்பிச் செல்கிறது
கவிதைக்காரிக்கு..
Related Posts Plugin for WordPress, Blogger...