எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தினம் உருள்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தினம் உருள்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 ஏப்ரல், 2013

தினம் உருள்தல்

துறப்பதும் இறப்பதும்
வாய்க்கிறது புத்தனுக்கு
ராகுலனும் யசோதராவும்
விட்டுப் போன மிச்சங்களாய்
கௌதமனின் அடையாளம்
சுமந்து கிடக்கிறார்கள்.
சித்திரகுப்தனின் ஏட்டில்
மார்க்கண்டேயர்கள் மரிப்பதில்லை.
அஸ்வத்தாமனாய் அலைகிறார்கள்.
ஆலம் உண்ட பெருமான்
ஆலாலத்தின் கீழ் அமர
நெருப்புத்தவம் இருக்கிறாள் உமை.
இமயம் உருகுகிறது..
கங்கையும் காவிரியும்
சரஸ்வதியாய் பூமிக்குள் சுருள
சுட்டபடி தினம் உருள்கிறான் சூரியன்..
Related Posts Plugin for WordPress, Blogger...