எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

செந்நிறச் சர்ப்பம்.

பசுமை தோய்ந்த மலையில்
ஒரு நீலப்பூ பூத்திருக்கிறது.
மஞ்சள் பறவை ஒன்று
சிகப்பு அலகில்
வெள்ளை மகரந்தம்
தோயப் பறக்கிறது.
அரக்கு மலையில்
சாம்பல் நிறச் சாலைகள்
வழிந்து விழுகின்றன.
வானவில் வண்ணங்களில்
கொழுப்பு சுமந்த இறைச்சிகள்
திமில்களுடனும் குளம்புகளுடனும்
அசைந்தோடுகின்றன.
பருந்துப் பார்வையில்
செந்நிறச் சர்ப்பமொன்றைத்
தேர்ந்தெடுத்திருக்கிறாய்.
சீறித்தப்பிக்க விரும்பா அதுவும்
உன்னைச் சுற்றத் தொடங்குகிறது.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...