எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 29 டிசம்பர், 2018

அந்தகாரத்தில் சாமி.

இருண்மையான உலகத்துள்
அடைத்து வைத்திருக்கிறோம்
எமது ஈசன்களை.
நாம் தரும் சிறுவெளிச்சமே
போதுமானதென்று நினைக்கிறோம்.
உணவுப் பொருட்களைக் கொட்டி
அபிஷேகமென்கிறோம்.
விட்டுப் போனவற்றை
யாக குண்டத்திலும்.
பூக்கள் மேல் பூக்கள் சாற்றி
மூச்சுத் திணற அடிக்கிறோம்.
களிம்பு பீடம் சுற்றுகின்றன
கரப்பான்கள்.
பணக்காரச் சாமியென்று
வைர க்ரீடம் ஏற்றுகிறோம்.
உண்டியல் கொள்ளாப் பணத்துடன்
மேலெறியப்பட்ட கோரிக்கைகளை
கவனம் கொண்டு மோனத்திலாழ்ந்து
அந்தகாரத்தில் தனித்திருக்கிறார் சாமி.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...