எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 19 டிசம்பர், 2018

ஒரு துளிப் புல்.

பாறைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது
தவழ்ந்து கிடக்கும் அம்மலை.
எங்கும் ஏதும் நிற்கவோ நடக்கவோ
கிடக்கவோ இடமில்லை அதன் மீது.
வழு வழுத் திட்பமாய்
காற்றைக் கூடத் தள்ளி விடுகிறது அது.
வெய்யில் மழை வேண்டா விருந்தாளிகள்.
பனி அணைத்த விடியலில் ஈரம் மினுமினுக்கும்.
எதன்மீதும் அதற்கு வெறுப்பில்லை
எதிர்ப்பில்லை பொருட்டில்லையெனினும்
அதனைப் பொருட்படுத்தி அண்டி
இடுவலான ஈரத்தில்
உயிரைப் பிடித்துப்
பிணைந்தாடிக் கொண்டிருக்கிறது
ஒரு துளிப் புல்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...