எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 அக்டோபர், 2015

ஊமை மொட்டுகளும் இளம் மொட்டுகளும்.



இப்போது இவர்கள் ஊமை மொட்டுக்களாம்.
இம்மொட்டுக்கள் இதழ் விரிப்பது
இறை பூஜைக்குச் செல்லும் ஆசையில்
ஆனால் இவை அர்ச்சிக்கப்பட்ட இடங்கள்
கல்லறை மேடுகள்.

          ~~~~~~~~~~~~~

இளம்மொட்டுக்களின் இதயஸ்வரங்கள். :-

பெண்களை எதற்காகப்
புஷ்பங்களோடு ஒப்பிடுகின்றார்களோ ?
அவர்கள் சீக்கிரமே மலர்ந்து
சீக்கிரமே வாடிவிடுவதாலா. ?
இந்த ஊமை மொட்டுக்கள்
இளமைக் கனவுகளுடன்
இதழ்விரிப்பது
இறைபூசைக்குச் செல்லும் ஆசையில்.
ஆனால் இவை அர்ச்சிக்கப்பட்ட இடங்களோ
பிணங்களின் பாதங்களில்
சவங்களில் புதைகுழிகளில்.
இவர்கள் தங்கள் வானில் நிலவு
புன்னகைக்குமென .எதிர்பார்க்கின்றார்கள்.
ஆனால் புன்னகைப் பூப்பொரிக்க வந்தவை
அக்கினி நட்சத்திரங்களே என்றறிந்ததும்
சாம்பற்பூக்களாக சிதறி விடுகின்றார்கள்.
வாசனைப் பூக்களே நீங்கள் வாடாமலிருக்க
காகிதக் குப்பைகளை வைத்திருக்க வேண்டும்.
அல்லது காகிதப் பூக்களாக மாற வேண்டும். 

-- 85 ஆம் வருட டைரி 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...