எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 ஆகஸ்ட், 2015

மதுவின் டைரி.



ஒவ்வொரு இலையையும் விரலிடுக்கில் தளிர்த்து பொன்னிறத் தளிரை பச்சையாய் மாற்றி செழுமையான செடியாய்க் காணவே கிளை நினைக்கும். ஒரே இரவில் விரலோடு சல்லாபித்து விட்டு மண்ணில் வீழ்ந்து போக இலை துடிப்பதைக் கிளை எப்படிச் சம்மதிக்கும். ?

இது மருதாணிச் செடிக்கு மட்டுமல்ல ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமாய் எனக்குப் படுகின்றது.

இழத்தல் ஒவ்வொரு இலையின் எதிர்பார்ப்பு, இதுதான் பெண்ணின் எதிர்பார்ப்பைப் போல. உன் எதிர்பார்ப்பு ஓரிரவில் உதிர்ந்து போகிற மருதாணி இலை போன்றதா ? அன்றி நகத்தோடே உறவாடி நகத்தோடே அழிந்து போகின்ற சிகப்பு வர்ணம் போன்றதா. ?

எனக்குப் பிடித்தது கவிதை – மதுவைப் போல.  

உருவம் :-

குண்டாய், குட்டையாய், ( லைக் பிந்துகோஷ் ) சோடா புட்டிக் கண்ணாடி போட்டுட்டு, கோணல் வகிடும், 50 பைசா அகலப் பொட்டும், ( ஜானகி மாதிரிப் பாடகி )  (சிரிப்பாய். )

பொய்முகங்கள் – பூபாளம்.. பூபாளம் பூவாகப் பூத்துப் பிஞ்சாகி, கனியாகிச் சுவை தரட்டும். தரமான இலக்கியப் படைப்புகள் தலை நிமிரட்டும். பொறுப்பு மிக்க இளைஞர்களின் புனித வேள்விக்கு என் அன்பான வாழ்த்துகள். – இப்படியாய் ( பலே.. ! ) . உன் நட்புக்காய் யாரேனும் ( ஆர்டர் ).

தொலைபேசி தொலைதூரத்தையும் அருகில் கொண்டு வரும் அபூர்வ சாதனம். அறிமுகமில்லா சிநேகத்தையும் ஆழப்படுத்தும் அழகு சாதனம்.


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...