எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

மனத்தின் மரூக்கள் :-



மனத்தின் மரூக்கள் :-

PIN :- SNEGAM
ப்ரியங்களுடன் மது.

இவை இந்தக் கவியரசனின்
அரண்மனை வாயில்முன்
நடைபாதை விரிப்புகள்.

சில கவிதை யாழ்கள்
மீட்டப்படும்போது
மனிதம் மட்டும் இளகுவதில்லை.
இங்கும் அதுபோல்
யாழே இளகிற்று. இறைஞ்சிற்று.

பிரபஞ்சம் சுற்றிக்கொண்டிருப்பது
நட்சத்திர ஜிகினாக்களை
மட்டும் வைத்தல்ல.
உன் கவிதைகளையும் சேர்த்துத்தான்.

இவை எரிநட்சத்திரங்களாய்
விழவில்லை என் கையில்.
உதிர்த்துவிட்ட பவளங்களாய்,
நிலம் சேகரிக்கும் நீர்ச்சத்தாய்
மனத்தின் மரூக்களாய்

இந்தப் ப்ரவாஹத்தின் சரியல்கள்
என்மீது
ப்ரியச் சரியல்கள்.
இனி
கவிதைகளைத் தனியாய்.

இந்தக் கவிஞர்
நிஜப்பசுமைகளுக்குள்
ஸ்நேகப்பயிர் வளர்க்க
புதிதாய்ப் பூக்கள் கோர்க்க
இலைகளுக்குள் பச்சையம் புகுத்த
சூரியனாய்
ஆனால்
சூரியனே பிரிவு வெம்மையை
நினைத்துருகி மருகி
நினைத்துருகி ‘ஆகுதீயில்’
இந்த வாடுதல்
எனக்கு வேதனை.

தாகவிடாயால் உயிர்த்தல் வேண்டி
நல்மழைதேடி புஷ்பிக்கக் காத்திருக்கும்
மென்பூ என் தோழன்.
இவர் பாறையாய் மாறி
வர்க்கபேதம் கண்டு சீறிய விளைவு
‘வர்க்கப் போராட்டமாய்’
‘எதிர்காலமாய்’
‘கானற்கனவுகளாய்’
உருவம் எடுத்துக்கொள்கையில்
‘ஏக்கமும்’
‘ஒரு சுதந்திர தினநாளிலும்’
நம்முள் விளையும் எண்ணப்பயிருக்கு
நல்லுரமாய் அமைகின்றன.

ஸ்நேகம் பற்றி இவரெழுதிய கவிதைகள்
வெளிவந்திருப்பது வெறும்
பேப்பர்களில் மட்டுமல்ல.
நம் மனதின் சிந்தனைச்சோலைகளிலும்தான்.

மனசோடு சேர்த்து வாயிற்படி சிரிப்பதும்
உதடுகள் புன்னகையை உச்சரிப்பதும்
கண்கள் சோகம் வழியவிடுவதும்
இவரால்தான் உவமைப்படுத்தமுடியும்.

இவை இந்தக் கவியரசனின் இராஜபாட்டையில்
நான் தூவிய மனத்தூவல்கள்
மனத்தின் மரூக்கள்.
மனஸு நிறைந்த ப்ரியங்களுடன் மது.

- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...