எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 26 ஆகஸ்ட், 2015

வரதட்சணை:-



வரதட்சணை:-

இறைபடுதலும் ஊறுதலும்
கிணற்றின் தொழில்கள்.
ஊற்றுக்களே
அடைபட்டுப்போய்விட்டன.
இனி இறைத்தலென்ன
செய்யும் ?
இனிமேல்
வாளிகள் அள்ளப்போவது
நீர் அல்ல
மணல்களைத்தான்
சுடுமணல்கள் அள்ளி..
பூமிக்குச் சூடு போடுதல்களைக்
காயமேற்படுத்தலைத்
தவிர்க்கலாமே
வேண்டாம்.
இறைத்தலை நிறுத்துங்கள்
இல்லாவிட்டால்
பூமி இன்னொரு சூரியனாகும்
பூமியைச் சுற்றுலும்
மணல் மண்டலம் உருவாகும்
வேண்டாம்
இறைத்தலை
சீக்கிரம் நிறுத்துங்கள்
நம் பொசுங்கல்களுக்காய்
இல்லாவிடினும்
புதிய விதைகள்
விஷம் படாமல் காற்றப்படட்டுமே.

-- 85 ஆம் வருட டைரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...