எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 டிசம்பர், 2014

வேட்டையாடி வேட்டையாடி..



முன்பொரு நாள்
சந்தித்திருந்தேன்
சில முத்தங்களோடு
நெருப்புக் காற்றில்
நிரப்பப்பட்ட பலூனாய்
எந்நேரமும்
எங்கெங்கும் பறந்துகொண்டு
பின் தோல்பாவையாய்
ஆட்டுவித்திருக்கிறேன்.
தூண்டில் முள்ளில்
எனக்காக மட்டுமே
ஆடிக்கொண்டிருந்தாய்
வெவ்வேறு சபைகளும்
நடனங்களும் நான்
கண்டு களித்திருப்பது அறியாமல்.
வெறுமனே விட்டு விட்டு
வேறுதேசம்கூட
போய்விடுவேன் வேட்டையாட
வேட்டையாடி வேட்டையாடிக்
களைத்து வேர்வை பெருக்கெடுக்கத்
தேடுகிறேன் உன்னை
விட்ட இடத்தில் பதுமையான நீ
பழைய பேரன்போடு
எனை அணைப்பாய
உன் மேல்சீலையால்
என் முகம் துடைப்பாயா.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...