எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 அக்டோபர், 2014

உச்சங்களின் ஊசி வழி

கண்ணீர்
அது அவளுக்குப்
பிடித்தமான பதார்த்தம்
தாயின் பத்துமாத
பந்தம் போலப் பிரிக்கமுடியாதது.
மனச்சூட்டில் கொதித்துக்
கண்வழியே இதமான
வெம்மையில் பொங்கி
மூக்கோரத்தைக்
கன்னத்தை முத்தமிட்டு
உதட்டோரம் சரசமாடி
எண்ண ஏக்கங்களின்
உப்புணர்வை
ருசிக்க வைக்கும்
கண்ணீர்..
அது அவளுக்குப்
பிடித்தமான பதார்த்தம்.

-- 82 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...