எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 அக்டோபர், 2014

காகிதப்பூக்கள்



காகிதப் பூக்களால்
மலர்கள் காயம்படும்

வீடுகள் தோறும்
காகிதத் தோரணங்கள்

வாசமும் மென்மையும்
இழந்த காகிதப்பூக்கள்
ஜாடிகள் நிறைய்ய

சுவற்றுக்கு வெளியே
மனக்கிளைகளை
வெட்டிக் கொள்ளும்
வித்யாச மரங்கள்.

நீர் பாய்ச்சிய தோட்டக்காரனுக்காய்
கிளைவிரித்துச் செடிக்குச்
சூரியன் மறைக்கும்
ஆலகால விருக்ஷங்கள்.

ஆலகாலங்கள்
அழிக்கப்பட வேண்டும்
கோடாலிகளால்
கெல்லப்படவேண்டும்.

-- 82 ஆம் வருட டைரி

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...