எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 செப்டம்பர், 2014

புத்தனின் புத்திமதிகள்.

சில சலனங்கள்
உற்பத்தியானபோது
சில பேருந்துகள்
தவறவிடப்பட்டபோது
சில வெள்ளைப்பூக்கள்
தூதனுப்பப்பட்டபோது
சில மாலை நேரங்கள்
காயப்பட்டபோது
சில கடற்கரை மணல்கள்
பயணம் புறப்பட்டபோது
சில முறைக்கும் பார்வைகள்
துரத்தியபோது
சில பரிசுப் பொருட்கள்
கைமாறியபோது
சில காஃபிகள்
ஆடை படர்ந்த போது
சில ஃபாமிலி ரூம்கள்
வாடகைக்கு எடுக்கப்பட்ட போது
சீறாத அவன்
சில நேரச் சலனங்களின்
உற்பத்தியின் விளைவைக் கேட்டபோது
சீறிப்பாய்ந்து
சிந்தனைத் தெளிவின்றி
புத்தனாய்ப் புத்திமதிகளை
எரிமலையாய்க் கொட்டிப் போனான்
சித்தம் கலங்காத அவள்கூடச்
சிதறித்தான் போனாள்.

ஆசை அறுமின் ஆசை அறுமின்..

-- 83 ஆம் வருட டைரி


1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...