எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

ஆப்பிள் தோட்டங்களும் பாம்புகளும்.

நோவாவின் கப்பலில்
எனக்கான இடம் கேட்டு
விண்ணப்பித்திருந்தேன்.
ஒற்றை ஏவாளுக்கே
இடமுண்டென சொல்லப்பட்டது,
ஆப்பிள் தோட்டங்களும் பாம்புகளும்
ஏவாள்களுக்கானவை எனக் கூறிய
ஆதாம் ஆலிலையில்
குழந்தையாகி இருந்தான்.
ஆப்பிள் தோட்டத்தில்
புல்லாங்குழலாய் ஒலித்து
துளைபட்ட மூங்கிலாகிக்
கிடந்தாள் ராதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...