எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 அக்டோபர், 2011

கல்லூரி அரசியல்.

மக்கள் பேனாக்களை
R1 ல் தொலைத்துவிட்டு
NR1 ல் தேடிக்கொண்டிருப்பார்கள்.

ஆசிரியர்கள் அரசியல்வாதிகளாய்
P.L.SONI. க்கு விளக்கம் கொடுத்து
தேந்தெடுக்கச் சொல்வார்கள்.

ப்யூன்கள் அடக்குமுறையைக்
கையாளும் போலீசாராய்
மாறுவார்கள்.

காண்டீன் அரசியலின்
பெண் ப்ரவேசமாய்க்
கவர்ந்து இழுக்கும்.

மரங்கள் பின்னிப் பிணைந்து
அரசியல் கூட்டத்திற்குப்
பந்தல்கள் அமைக்கும்.

கழைக்கூத்தாடிகளாய்
மேடையில் தோன்றும்
சகமணிகளைக் கண்டு
கூப்பாடு போடவும்,
‘ஹோ’ என்று கத்தவுமே
கூட்டம் கற்றுக்கொண்டிருக்கும்.

அரசியல்வாதிகள்
டெப்பாசிட்டை இழந்து
திரிவதுபோல் ‘மக்கள்’
அரியர்ஸ் வாங்கி
அசராமல் அழுவார்கள்.

வெற்றிபெற்ற அரசியல்வாதிகள்
வாக்குறுதிகளைக் காற்றில்
பறக்க விடுவதைப் போல
”அட்மிஷன்” கிடைத்தவுடன்
படிப்பதைக் கைவிட்டுவிடுவார்கள்.

எதிர்க்கட்சிகளின்
பொலிட்டிக்கல் ஸ்டண்ட் போல
மக்களும் போராட்டம் செய்வார்கள்.

தேர்தல்நேரம் கும்பிட்டுக்
காலில் விழும் அரசியல்வாதியாய்
தேர்வுநேரம் நைட்லாம்பில்
புத்தகங்களுக்கு கால் அமுக்கிக்
கொண்டிருப்பார்கள்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...