எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 அக்டோபர், 2011

சிதறல்கள்..

இனிப்பு வியாதி வரும் என
சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
இரத்த அழுத்தம் துள்ளும் என
பேசமாட்டேன் என்கிறாய்.
இதயம் படபடக்கும் என
பார்க்கமாட்டேன் என்கிறாய்.
*************************************
நீர்க்குமிழி, பாய்மரக்கப்பல்,
காலறுந்தபட்டம்
இதெல்லாம் தட்டாமாலையாய்
சுற்றிச்சுற்றி..
உன்னைச் சுற்றி நான்
சுற்றுவது போல்.
**************************************
சேற்றையாவது வீசு
சேர்த்துக்கொள்ளாமல் வி்டாதே..
திட்டிவிட்டுப் போ
கொட்டிவிட்டுப் போ
அந்தத் தழும்புகள்
சுகமானதாய்..
**************************************
நீள் வெளியில் காற்றாகி
இழுத்துச் செல்.
முடிவில்லாத வெளியில்
இறக்கைகளில்லாமல் தவழ்வது.
யாதுமற்ற ஒன்றாகி
யாதுமாய் ஆவது.

3 கருத்துகள்:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

இனிப்பு வியாதி வரும் என
சிரிக்கமாட்டேன் என்கிறாய்.
இரத்த அழுத்தம் துள்ளும் என
பேசமாட்டேன் என்கிறாய்.
இதயம் படபடக்கும் என
பார்க்கமாட்டேன் என்கிறாய்.

முதல் சிதறல் மிக நன்றாக இருக்கிறது!

பால கணேஷ் சொன்னது…

யாதுமற்ற ஒன்றாகி
யாதுமாய் ஆவது.
-Class! Only possible by Thenu akka! Superb!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நம்பிக்கை பாண்டியன்

நன்றி கணேஷ்:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...