எத்தனை முறை
நீ பொய்யுரைத்தாலும்
நம்பிவிடுகிறது உள்ளம்.
நீ எது சொன்னாலும்
அது உண்மையாகத்தான்
இருக்கவேண்டும் என
மனதில் செதுக்கிய
எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
இருக்கட்டும் போ
அது உண்மையோ பொய்யோ
நான் உண்மை என்றே நம்பிக்கொள்கிறேன்.
உன் மேல் வைத்த நம்பிக்கைக்காக மட்டுமல்ல
என் மன நிம்மதிக்காகவும்தான்.