எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 மார்ச், 2019

வார்த்தைக் க்ரீடை

சுழலாய்ச் சருட்டிவிடுமெனத் தெரிந்தும்

வண்ணமயமாய்க் கவர்ந்திழுக்கிறது

வார்த்தைக் க்ரீடை.
  

வியாழன், 14 மார்ச், 2019

கூம்புதல்.

பூக்களைக் கத்தரித்து
ஜாடி மகிர செருகியாயிற்று.
நிரம்பி வழிகிறது வரவேற்பறை.
புன்னகைகள் பிடுங்கப்பட்ட துயரத்தில்
கூம்பிக் கிடக்கின்றன தொட்டிகள்.
  

செவ்வாய், 12 மார்ச், 2019

இருதிணை.

பாம்பின் தலைக்கும்
உடலுக்கும் பதிலாக
இருவேறு உயிராகப்
புதுப்பித்தாயிற்று.
இரண்டுக்குமிடையில்
சிக்கித் தவிக்கும் மனம்
இருதிணைச் சிந்தனையில்
உயிர்தெழுவதில்லை
  

புதன், 6 மார்ச், 2019

முடக்கம்.

நகரத்தின் மையத்தில்தான்
அமைந்திருக்கிறது வீடு.
நாலாதிசையும் பறக்கிறது சிந்தனை.
நகர்விலும் பெயர்தலிலும்
புதிதாக என்ன முளைத்துவிடப் போகிறதென
முடங்கிப் படுத்திருக்கிறது மனம்.
வெம்மையில் குளிர் கர்ப்பமாய்
சுருட்டி ஒளிந்திருக்கிறது சாளரம்.
தொப்புள் கொடியாய்
போஷித்துக் கொண்டிருக்கிறது
திறந்து மூடும் வாயில்.

செவ்வாய், 5 மார்ச், 2019

ஒளிர்தல்.

ஐந்து முகங்களில்
ஒளிர்கிறாள்...
கண்மூடித் திறக்கிறேன்
ப்ரகாசமான முகத்தோடு..
தீபத்தால் தீபத்தை
ஏற்றுதல் இதுதானா.
Related Posts Plugin for WordPress, Blogger...