எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
நொடிப்பூக்கள்.
சனி, 22 பிப்ரவரி, 2014
இன்னுமொரு நாள்.
ஜன்னலோரம் உணவுக்காய்க்
காத்திருக்கிறது காக்கை.
சொட்டுச் சொட்டாய் வடிந்து
சத்தமெழுப்பி
இறுக்கத் திருகச் சொல்கிறது குழாய்.
தயங்கித் தயங்கி
உள்நுழைது காபி மணத்தை
நுகர்ந்து செல்கிறது காற்று.
விசிலடிக்கிறது குக்கர்.
இசைக்கிறது கெடிகாரம்.
அழைக்கிறது துவைக்கும் யந்திரம்.
துலக்கும் பாத்திரங்கள்
கதறிக் கொண்டிருக்கின்றன
வேலைக்காரி கையில்.
தொடங்க வேண்டாம்
இன்னொரு நாளை..
புறம்தள்ளித் தானே
ஓட்டத்தைத் துவங்கி
பிடறி பட ஓடிக்கொண்டிருக்கிறது அது.
வெள்ளி, 14 பிப்ரவரி, 2014
குயிலாய் வாழ்தல் இனிது.
சனி, 8 பிப்ரவரி, 2014
வெள்ளி, 31 ஜனவரி, 2014
லட்சம் ஞாபகங்கள்
யாராக இருக்க வேண்டும்.
யாராக இருக்கிறேன்.
யாராக இருந்தால் நல்லது.
எல்லைக் கோட்பாடுகள் என்னென்ன..
எவெரெவர் கண்ணுக்கு
எப்படிப் புலப்படுகிறேன்
எவெரெவர் எப்படி
உணரக் கூடும்.
யாரை யாருக்குப் பிடிக்கிறது
யாரை யார் வெறுக்கிறார்கள்.
யார் யாரோ எப்படிப் போனாலென்ன
எதன் மிச்சமும் எச்சமும் எதிலிருக்கிறது.
புகைப்படங்களையும்
எழுத்துக்களையும் கூர்ந்து நோக்கிக்
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
என்னிலிருந்து யாரோவாகிறேன்.
நூறு பிறவி எடுக்கும் உருமுன்
யாராய் இருந்தாலென்ன
லட்சம் ஞாபகங்கள் சிதறிக் கிடக்கின்றன
அத்தனை பிறப்பாயும்.

யாராக இருக்கிறேன்.
யாராக இருந்தால் நல்லது.
எல்லைக் கோட்பாடுகள் என்னென்ன..
எவெரெவர் கண்ணுக்கு
எப்படிப் புலப்படுகிறேன்
எவெரெவர் எப்படி
உணரக் கூடும்.
யாரை யாருக்குப் பிடிக்கிறது
யாரை யார் வெறுக்கிறார்கள்.
யார் யாரோ எப்படிப் போனாலென்ன
எதன் மிச்சமும் எச்சமும் எதிலிருக்கிறது.
புகைப்படங்களையும்
எழுத்துக்களையும் கூர்ந்து நோக்கிக்
கூடுவிட்டுக் கூடுபாய்ந்து
என்னிலிருந்து யாரோவாகிறேன்.
நூறு பிறவி எடுக்கும் உருமுன்
யாராய் இருந்தாலென்ன
லட்சம் ஞாபகங்கள் சிதறிக் கிடக்கின்றன
அத்தனை பிறப்பாயும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)