எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பக்திப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பக்திப்பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 நவம்பர், 2017

விநாயகர் துதி.

விநாயகன் பேர் கொண்டு வினைகள் பல தீர்த்திடுவான்
விண்ணிற்கும் மண்ணிற்கும் முதலான பெருமானே !
ஆனை முகத்தானே ! யார்க்கும் நலம் புரிந்திடுவான் !
அன்னை பார்வதிபோல் அழகுப்பெண் தேடுகிறான். !

உன்னையே கதி என்று உய்யுமுன் அடியார்க்கு
உதவினேன் எனக்கூறி ஐந்துகரம் நீட்டிடுவான்.
பெருமை பல கொண்டிருந்தும் பொறுமையினால் அமைதிகொண்டு
சிறுமை பல புரிவோர்க்கும் சிறப்புவரம் தந்திடுவான்.

உன்னையே கதியென்று உய்யும் முன்  ( உய்யும் உன் ) அடியார்க்கு
‘தந்தேன் அபயம்’ என ஐந்து கரம் நீட்டிடுவான்.

பெருமை பல கொண்டிருந்தும் சிறுமை பல புரிவோர்க்கு
பொறுமையினால் அமைதி கொண்டு பெரும் நலனே நல்கிடுவான்.

-- 8 . 4. 1981.

Related Posts Plugin for WordPress, Blogger...