கார்மேகம்
கார்மேகம் வந்தது
கனத்த மழை பெய்யுது.
நீர்நூலைச் சேர்த்து சேர்த்து
அருவி நெசவு செய்யுது.
ஓடைத்துண்டாய் விழுகுது
நதிச்சேலையாய் நெளியுது.
அனைத்தும் ஓடி ஓடிவந்து
நீலக்கடலில் கலக்குது.
நீர்மேல் சூரியன்
உலவுது
கதிரில் வெப்பம் பரவுது
.
ஆவியாகி நீர் எழும்புது
மேலே கொஞ்சம் செல்லுது
கருத்த யானை உருக்கொண்டு
கார்மேகம் ஆகுது
மீண்டும் மழை பெய்யுது
இதுவே இயற்கை சுழற்சியாம்