எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

காத்திருப்பு

கரைகாணாக் காதலில்
செய்யப்பட்டவள்தான் அவள்
ஆனாலும் அவளுள் இருந்த கடல்
உள்வாங்கி விட்டது.
மணற்செதில்களாய்க் கிடக்கும் அவளைச்
சூரியனும் சந்திரனும் வருடிச் செல்கிறார்கள் தினம்
இனி அவள் மலர ஒரு யுகம் ஆகலாம்
பிரபஞ்சத்தின் கருந்துளையில்
இனியொரு வெடிப்புக்காய்க்
காத்துக்கிடக்கிறது 
அவளது பிரியம் என்னும் விதை.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...