எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 அக்டோபர், 2021

யாரோ.

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்.
தூது சென்ற நான்
அவர்களின் காதலைச்
சுமந்து நிற்கிறேன்.
கிளையாய் இலையாய்ப்
பூவாய் மலர்ந்து கிடக்கும்
அக்காதல் விருட்சத்தின்
ஆணிவேரும் சல்லிவேரும்
என்னுள் வேரோடிக் கிடப்பதை
எப்படிக் கெல்லி எறிவது.

8888888888888888888888

அவனும் அவளும்
யாரோவாகி விட்டார்கள்
தூதுசென்ற நான்
யாரோடு நிற்பது ?

 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...