எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 செப்டம்பர், 2021

இனிது

உன் நினைவுகளில் 
நான் உறையும்போது
காலமும் உறைந்து விடுகிறது
கடிகாரத்தின் முட்கள்
என்னை உருக்கும்போது
ரோஜாக்களாய் நிரம்பிக்
கிடக்கிறது உன் ஞாபகம்.
எவ்வளவு மறைத்தும்
என் முகம் வழி
பூத்து விடுகிறாய் நீ.
கசியும் காற்றில்
உன்னை முகர்கிறேன்.
நீயாக நுழைந்து
நானாக மாறிவிடும்
உன் வாசனைகளுடன்
வாழ்வது இனிது.

 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...