எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பழக்கதோஷம்

மரங்கள் காத்திருக்கின்றன
பறவைகள்தான்
ஓய்வெடுக்க நேரமில்லாமல்
உணவுத் தேட்டையில்.
கூடுகளில் முட்டைகள்
தாமே பொறிந்து வருகின்றன
சிறு சிறகு கோதி
விழுந்தெழுந்து தாமே பறக்கக் கற்கின்றன
குஞ்சுகள் பறந்தபின்னும்
தாய்ப்பறவைகள்
பழக்கதோஷத் தேட்டையில்
பறந்துகொண்டே இருக்கின்றன. 

 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...