எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 21 மே, 2021

மொக்கு

மெல்லத் துளிர்விடுகிறது
ஒரு மொக்கு
இலையுதிர் காலத்துக்குப் 
பின்னுமொரு வசந்தம்.
எங்கோ இருக்கும்
தேனியின் நாசியிலும்
வசந்தத்தின் பெருமூச்சு.
புறப்பட்டு வருகிறது
அலைந்து அலைந்து
தேடித் தேடி
தனக்காய்ப் போதவிழத்
தொடங்கியிருக்கும் முகை நோக்கி. 
ரீங்காரம் மனம் கொய்ய
சிறகடிப்பு சிலிர்க்க வைக்க
தேன் சுரக்கும் இதழ்களோடு
மடல் மடலாய்
விரியத் தொடங்குகிறது மொக்கு.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...