எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 அக்டோபர், 2018

உதிர் ஏக்கம்.

உதிர் ஏக்கம் இன்றி
கூதிர்காலத்தில் ஆடிக்கொண்டிருக்கின்றன
முதிர்பூக்கள்.

மலர்வதே ஒரு தவமாய்
மலர்வதே ஒரு வரமாய்
மலர்வதே ஒரு பலமாய்.

முதிரும் புதிருமாய்
புன்னகைப்பது பார்த்தும்
மொக்குகள் கிளைக்கின்றன

நீர்பட்டு நார்பட்டுக்
காயரும்புகளும் சேர்ந்துவிடுகின்றன
மாலையாகும் விரிபூக்களுடன்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...