எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 அக்டோபர், 2018

கண்களின் வண்ணம்.:-

கண்களின் வண்ணம்.:-


ஓங்காரம் உச்சரித்து
ஒழுங்கசைவில் அமர்ந்து
உள்முகமாய்ப் பார்க்க
ராபின்பறவைப் புருவம் துடிக்கிறது.
நீலமேகம் அசைந்து கடக்கிறது
கடலாய் எழும்பித்தாழ்கிறது இமை
பசுமைப் பயண அடுக்குகளில்
மசமசப்பாய் மஞ்சள் அலைய
செங்கல் வண்ணத்திலொரு அருவியும்
செஞ்சாந்துத் தடிப்போடு ஒரு சூரியனும்
வழிந்திறங்க விழிக்கோளம் உருள்கிறது
உள்நிலவின் வெளிச்சத்தில்.
நிறம்விரித்து நிறம் குவித்துக்
கருமைக்குள் உருண்டு உருண்டு
களைப்பாறிக் கிடக்கிறது.
கண்களின் வண்ணம்.
  

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...