எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

கரடியும் பட்டாம்பூச்சியும்.

*தெரிந்தவர் தெரியாதவர்
பேதமற்று இதழ் மலர்கிறது.
பேருந்தின் முன்சீட்டில்
பூத்த குழந்தை.

**************************************

 
*இறக்கைகள் உண்டு..
பறக்க முடியவில்லை..
உன் அன்பெனும் சிறையில் நான்.
*வார்த்தைகள் ஸ்தம்பித்த
மௌன உரையாடல்
தொடர்ந்து செல்கிறது
தன்னைத் தான் விடுவித்து
நாட்காட்டி திசைகாட்டி இன்றி
கனத்துச் சோம்பியிருக்கும்
கரடியைத் தூக்கிப் பறக்கும்
பட்டாம்பூச்சியின் பின்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...