எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூன், 2016

மானசீகம்.



அவசியமில்லாதவள்:-

உங்களுக்கு நான்
இப்போது அவசியமில்லாதவள்
என்றெனக்குத் தெரியும்
ஏனெனில்
உங்கள் அத்யாவசியங்கள் முடிந்தபின்
நானொரு பொருட்டா என்ன?..

****************************************

இளமையின் நனைப்பினூடே
கலங்கிப் போகும் சாம்ராஜ்யஙகள். 


நிலவுக்குத்தான்
வளர்ச்சியும் தேய்வும்
உண்டு என நினைத்தேன்.
ஆனால் சந்திரனே
உன்னுடைய அன்புக்குமா அப்படி. 

*****************************************


ஆகாயத்தை அண்ணாந்து
பார்க்கும்போதுதான் தெரிந்தது.
நாம் எவ்வளவு பெரிய
உலகப்பள்ளத்துக்குள்
விழுந்து கிடக்கின்றோமென்று.
**********************************

மானசீகக் காதல் :-

அவன் புலம்பல்
அர்த்தமற்று அவலப்பட்டுச்
சிதறிப் போயிற்று.
”அவன் மனக் காதலியாயிருந்தால்
இந்நேரம் கொலைசெய்திருப்பேன்
ஆனால் பாவிமகள் என்
மானசீகக்காதலியாயிற்றே” என்று.
 *****************************

-- 82 ஆம் வருட டைரி. 

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...