எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 மார்ச், 2015

என் தேவனே..



என் தேவனே !
எங்கே நீ..!
விடியலில் எழுந்ததும்
விழிக்கிறேன் உன் நினைவிலே
தூரத்து இரயிலின் சத்தத்தில்
கேட்டின் ஓசையில்
ஜன்னலின் விளிம்பில்
அழைப்புமணி அழைப்பில்
கதவின் இடுக்கில்
உன் முகம் பார்க்க ஏங்கி
என் முகம் பூத்துப் போச்சு.
உன் கண்களெனும்
கங்கைக்குள் மூழ்க வேண்டும்.
உன் அணைப்பெனும்
சொர்க்கத்தில் திளைக்க வேண்டும்.
உன் கைகளென்னும்
கோட்டைக்குள் சுவாசிக்க வேண்டும்.
உன் முத்தமெனும்
வெப்பமழையில் நனைய வேண்டும்.
உன்னைக் காணும் பொழுதிலே
நானாக நான் இல்லை
நீயாக நான் ஆனேன்.
நான் என்ற ஒன்றே இல்லை
சர்வம் நீ !
சரிகமபத நீ..!

-- 95 ஆம் வருட டைரி .

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...