எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 12 ஜூலை, 2013

தோழி..

எங்கள் பால்கனிக்கிடையே
இருபதடி தூரம்தான்.
தவ்விக் கொண்டிருப்போம்
அதைத் தாண்டிவிடுவதுபோல
ஒருவரைஒருவர் பார்த்தவுடன்.

கையசைப்பாள்.
என் மனம் பறக்கும் அவளிடம்.
நர்சரி ரைம்ஸின்
ரோஸி லிப்ஸ் அவளுக்குத்தான்.

எனக்குக் கேட்கவேண்டுமென
சுலோகங்களும் பாடல்களும்
பாடுவதும் என்னைக்கண்டதும்
வாய் மூடிக் கொள்வதுமாய்
அவள் குரல் விளையாட்டு.
அபூர்வராகங்கள்., சப்தஸ்வரங்கள்.

விடுமுறை தினங்களில்
படியேறி கதையளப்பாள்..
பெரிய மனுஷியாய்..
தொங்கட்டான்கள் ஆட
கண்கள் விரிய அவள் பேசுவது
ஆலங்கட்டி மழையாய்
என்னை நனைக்கும்.

எல்லாவற்றிலும் ஏறி விளையாடுவதில்
வாலற்ற கபீஷ் அவள்.
இறக்கை முளைத்தமுயல்குட்டி
முந்தானை இழுப்பாளா
முத்தம்கொடுப்பாளாவென
ஆசையுற்று நிற்கையில்

தொடத் தொட
இறக்கை அடிக்காத
கோழிக்குஞ்சாய் ஓடுவாள்.
தன் வீடுநோக்கி..
எல்கேஜியிலிருந்து
யூகேஜி செல்லும் என் அன்புத்தோழி

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதை மிகவும் கவர்ந்து விட்டார்கள் உங்கள் அன்புத்தோழி...

வாழ்த்துக்கள் - சொல்லிடுங்க...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...