எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 6 ஜூலை, 2013

கசக்கும் கோப்பைகள்..

கசக்கும் காஃபிக்கோப்பைகளை
நகர்த்தியபடி சொல்கிறாய்.
நீ ஒரு சாத்தான் என்று.

யோசிக்கத்துவங்குகிறேன்
நம் சந்திப்பிலிருந்து
அன்றான தினம் வரை.

சந்திக்க நினைத்ததைவிட
சந்தேகப்பட்ட நேரங்களை
காயப்படுத்திய கோபங்களை.

மாற்றி மாற்றிக் கேள்விகள்கேட்டு
துன்புறுத்திய கணங்களை.

கண் சந்திக்க ஏலாமல்
ஊசியாக் குத்தும் மழையில்
கண் கசிய நடக்கிறேன்.

கோட்டுப் பைகளுக்குள்
கை விட்டபடி புன்னகைக்கிறாய்
பலநாள் கோபம் மின்னலாய் ஜொலிக்க.

இடியைப் போல
இடித்துரைத்துக் கொண்டிருந்தது மனம்.

என்னிடம் இடம் அற்ற சாத்தான்
அடிக்கும் சாரலில் உன்னிடம்
இடம் பெயரத் துவங்கி இருந்தான்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமாக முடித்துள்ளீர்கள்...!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...