எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 8 மார்ச், 2013

நானான போது.

நானான போது..:-
******************************
கேசங்களை அலையென்றும்
நகங்களில் நிலவென்றும்
பாதங்களை தாமரையென்றும்
கண்களை கணைகளென்றும்
நீ வர்ணித்ததை எல்லாம்
பள்ளிப்பெண்ணாயிருந்தபோது
உண்மையென நம்பினேன்..
உலகத்தை உரித்துப் பார்த்தபின்
எதையுமே ரசிக்கமுடியாமல்..
உருவுக்குள் ஊடுருவும்
உன்மத்தர் உவப்பேச்சில்
உள்ளத்தை உலரவைத்து
ஆராய்ச்சி நோக்கோடு
அழகியலும் அழிந்து போக

கேசங்களுக்குள் நாகமென்றும்
நகங்களுக்குள் சதைகளென்றும்
பாதங்கள் தடம்மாற அல்லவென்றும்
கண்கள் நேர்கொண்டு நோக்கவென்றும்
திடமாய் சொல்ல முடியும்..
வயசுக் கோளாறு எல்லாம் கடந்து
தீர்க்கமான சிந்தனைகள் நானானபோது..

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...