எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 18 டிசம்பர், 2012

யாயும் ஞாயும்

யாயும் ஞாயும். 
***********************

தீபங்கள் அசையும் தொட்டியாய் 
உலவித் திரிந்து உற்சாகமாக்குகின்றன
வண்ண மீன்கள்.
ஆண் உணவு தூவுகிறான்.
பெண் புழுக்களைத்தூவுகிறாள்.
அளவில்லாத உயிர்ப்புழுக்கள்
அலைகின்றன நீரெங்கும்
ஆணுக்கும் பெண்ணுக்குக்கும்
வார்த்தைகளின் சப்தத்தில்
யுத்தம் நிகழும்போதெல்லாம்
உணவுக் கசடுகளில்
மூச்சுவிட முடியாமல்
மரித்துப் போய்க்கிடக்கின்றன மீன்கள்
அலங்காரக் கற்களடியில்

2 கருத்துகள்:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

soumiyadesam சொன்னது…

அழகான மீன்கள் கண்ணாடிக்கைதிகளாய்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...