எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

விடுதலை

உள்ளத்தின் வார்த்தைகளைப்
படிக்கத்துவங்கும்போதே
விடுதலை கிடைத்துவிடுகிறது.
முற்றுப் பெறாத கீதங்கள்
நிர்மால்யக் கொடிகள்
எழும்பத் துவங்குகின்றன.
அறுத்துக் கிடக்கும் கதிர்களாய்
அமைதியும் ஓய்வும்
தலை சாய்ந்திருக்கின்றன.
கலைந்து கொண்டிருக்கிறது
காற்று வெப்பமும் குளிருமாய்.
சுவாசங்கள் சந்திக்கும்
சங்கமத்தின்முன்னே
புரிந்துகொள்ளத்துவங்குகிறாய்
உன்னிடமிருந்து உனக்கே விடுதலை.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...