எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

இரப்பவன்..

ரோட்டோரம் கடை விரிப்பவனாய்
பரப்புகிறேன் அன்பை..
பார்வையிட்டபடி
உன் பாதையில்
தொடர்கிறது உன் பயணம்..
கரிக்கோடு இழுப்பவனாகவும்
கிறுக்கிக் திரிகிறேன்,
பின் தொடர்ந்து.
பார்வைக் காசைச்
சுண்டி என் பசிக்கு
தானமளிக்கிறாய்.
பசியடங்காமல்
சிக்னலில் மனக் குழந்தை
சுமந்து சோம்பித் திரிகிறேன்.
கையில் இருக்கும்
வார்த்தை பிஸ்கட்டுகளைப் போடுகிறாய்.
நான் எப்போதும் இரப்பவனாகவும்
நீ எப்போதும் வழங்குபவனாகவும்
தொடர்கிறது ஏதோ ஒன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...