எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 செப்டம்பர், 2012

பிச்சை

யாசகம் கொடுப்பவர்களும்
யாசிக்கிறார்கள்..
அன்புப் பிச்சை..

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

வேர்.

வேர் பிடித்துக் கிடக்கிறது காதல்
சுவரைக் கெல்லி என்ன
அஸ்திவாரத்தைத் துருவு.

வியாழன், 6 செப்டம்பர், 2012

செல்லப்பிராணி..

நாய்களைக் காதலிப்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்களோடு
அவர்களது உறவு முரணாகும்போது
சங்கிலியைக் கையில் மாட்டி
வேறொரு உலகத்துக்கு
இட்டுச் செல்கின்றன.
உருவாக்கப் புன்னகையில்லாமல்
ஓடிவந்து கன்னம் நக்குகின்றன.
வாலை வளைத்து இழைத்தபடி..
அவற்றின் பற்களோ நகங்களோ
கீறினாலும் நிறுத்தமுடியாத ரத்தம்
பெருகிக்கொண்டே இருப்பதில்லை.
முடிகள் சுவாசக்கோளாறு
உண்டாக்கினாலும்
சுவாசமே கோளாறாவதில்லை.
சில எலும்புத் துண்டுகள்
அல்லது பந்து போதும்
அவற்றுக்கு நிறைவளிக்க.
மூத்திரம் பெய்யவும்
மலம் கழிக்கவும்
வெளியே ஓடும் நாய்
அசுத்தப்படுத்துவதில்லை வார்த்தைகளால்.
மனிதர்களுடன் பேசுவதைவிட
குரைப்பொலிகளுடன் உரையாடுவது
இலகுவாய் இருப்பதால்
நாய்களோடு வாழ்பவர்கள்
பெருகிக் கொண்டிருக்கிறார்கள்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

நிலவு..

நிலவாய் எழும்புகிறது
உன் நினைவு
எப்படி மறைப்பது
எல்லார் பார்வையிலிருந்தும்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

மல்லிகை

புழுங்கிப் புழுங்கி
மணக்கிறது
மல்லிகை.
Related Posts Plugin for WordPress, Blogger...