நீ மரவள்ளிக் கிழங்கைத்
தணலிலிட்டுப் பொசுக்கையிலே
என் மனசும் பொசுங்கிப் போகிறது.
இப்படித்தானே இலங்கையிலும்
இளங்குருத்துக்களின் சாம்பல்கள்
சிதறிக்கிடக்கின்றனவென்று,.
இதயம் சீழ்கொண்டு
பேப்பர் ரோடுகளில்
பேனா ஊர்வலங்கள்
இரத்தம்கக்கிச் சாகின்றன.
-- 85 aam varuda diary
