எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சத்தங்களற்ற சந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சத்தங்களற்ற சந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 நவம்பர், 2015

சத்தங்களற்ற சந்தி :-

எப்போதோ உதிர்ந்துவிடும் என்றாலும்
எப்போதும் உதிர்வதில்லை ஒரு பூ.


மலர மலரச் சிரித்துக் கொண்டே
தனக்கு விருப்பமான அந்தியில்
குலுங்கும் இலைகளசைய
காற்றைப் பிடித்திறங்கி
ஏங்கிக்கிடக்கும் மண்ணை
முத்தமிட்டு எச்சிலாக்குகிறது அது.


சத்தங்களற்ற சந்தியில்
சருகுகள் அசைத்துச் சிரிக்கிறது காற்று.


காட்டுக் கொடிகள் பிரித்து
வெள்ளிப்பாய் விரிக்கிறது நிலவு.


துருவனுக்கு வாசனைக் கரம்நீட்டி
வெளுப்பாகிக்கொண்டிருக்கிறது பூ..



Related Posts Plugin for WordPress, Blogger...