அனலும் காற்றும்
மூச்சுக் குழலெங்கும்
கனவும் நனவுமாய்
சுற்றிச் சுழல்கிறது.
தடைப்படும் மூச்சினால்
சுருங்கித் திணறும் நுரையீரல்
என்றோ செய்த சாம்பவிக் கிரியாவை
நெஞ்சம் முழுக்க நிரப்புகிறது
இனிக்கத் துவங்குகிறது
நாவில் படும்போதெல்லாம்
கசந்து கண்ணைப் பிடுங்கிய
கபசுரக் குடிநீர்.