எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

ஆட்டக்குளங்கரா பள்ளி.

நாற்பதாண்டு கடந்தாலும்
ஞாபகங்கள் தொலையாது. 
ஞானப்பால் புகட்டிய
ஆட்டக்குளங்கரா பள்ளி
அமிர்தப்பால் ஊட்டிய 
அன்னைக்கு நிகரேயாம்.

விளையாட்டில் குள்ளமென 
வீசுபந்தில் ஒதுக்கினாலும் 
இசையார்வம் என்னை
உசரத்தில் நிறுத்தியது 
மூன்றாம் பரிசளித்து.

தமிழாசான் பீர்முகமது 
தகவான தலைமையாசான்.
நலமாக நாம் பெற்றோம் 
லலிதா, சுந்தர்ராஜன், 
அண்ணாமலை என்னும் 
நல்லாசிரியத் தெய்வங்கள். 

ஓடியும் கூடியும் 
விளையாட்டாய்ப் பாடம் படித்தோம். 
இன்று ஒவ்வொருவரும் 
தனித்தன்மை எய்தியுள்ளோம். 
வாருங்கள் தோழிகளே, தோழர்களே, 
கரம் கோர்த்து ஒன்றிணைவோம். 

பார்வதி, பத்மா, சாந்தா, புஷ்பலதா, 
சுந்தர்ராஜன், வாசன், ஜெயராம். 
எத்தனை வருடங்களானாலும்
நட்பாலே நாம் இணைவோம். 
நல்லாசிரியர்களையும் நம் பள்ளியையும் 
கரங்குவித்தே வணங்கிடுவோம். 
இதை ஊருக்கு உரக்கச் சொல்லி 
உளம் மகிழ்ந்தே  உவந்திருப்போம்.
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...