எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஜூலை, 2015

விடுதி மழை.

கோடை மழை
கொள்ளைப் ப்ரியம்
விடுதியின் ஜன்னல்களை
நீர்விரல்களால் தட்டி
வெளியே அழைக்கிறது அது

வெக்கை பிறக்கும் பூமி
பாதத்தைக் கதகதப்பாக்க
நாசி நிறைகிறது
மண் தூர்த்த மணம் இழுக்க
நனையாதேயெனத் தடுக்கத்
தாயில்லை அருகில்.

நெற்றியின் உச்சியிலிருந்து
பொட்டுவைக்கத் துவங்கும் மழை
நெஞ்சக்குலை நடுங்க
ஈரமாய் ஊடுருவி
தாவாங்கட்டை அசையத்
தலைதுவட்ட அறையெங்கும்
ஈரமாய் உதிர்கின்றன நீர்ப்பூக்கள்.

மழைக்கு உணக்கையாய்ப்
பலகாரமும் தேநீரும்தரும்
அம்மாவின் நினைவுபொங்கக்
கண்கள் கசிந்து
கட்டிடத்தைச் சுற்றிஓடும்
மழைநீராய்க் கரைந்து ஓடுகிறது
ஊர் நோக்கி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...