டைரிக் கிறுக்கல்கள்.
குழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 30 செப்டம்பர், 2012
சுகமான சுமை.
இரட்டைச்சடை கொண்ட
பட்டாம்பூச்சிகள் முதுகில்
இறக்கைகளாய்
பள்ளிக்கூடப்பைகள்..
சுமையா..சுகமா.
வெள்ளி, 28 செப்டம்பர், 2012
விட்டேற்றி.
நேசிக்காத ஒன்றை
நேசிப்பதிலேயே
நாட்கள் கடந்து விடுகின்றன.
ஒவ்வொரு முறையும்
விநோதமாகவே
சந்தித்துக் கொள்கிறோம்
நானும் நேசமும்.
நான் விட்டேற்றியாகிவிடும்போதெல்லாம்
குழம்பிக் குழம்பித்
தவிக்கிறது அது
என் பிடியில் இருந்து விடுபட்டு.
காத்திருந்த கொக்கு
துள்ளிய பார்வைமீனைக்கொத்தியபடி
காதலோடு பறக்கிறது
ஒற்றைப்பார்(ற)வை
வியாழன், 27 செப்டம்பர், 2012
சேறு
மழைக் குழந்தை
மண்ணில் தவழ்ந்தது.,
சேறானது.
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
அடங்கிய வீடு
அடுக்கிய ஓடுகளின் கீழ்
அடைபட்ட செங்கல்களுக்குள்
அடங்கிக் கிடக்கிறது வீடு..
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)