எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 நவம்பர், 2012

கூகையும் குகையும்.

குங்குமமாய்
வழிகிறது நெபுலா..
குளித்துக் குளிர்ந்து
கருநீராய் உறைகிறது லாவா.
எங்கோ ஒலிக்கிறது கூகை.
எதிரொலித்து ஒளிக்கிறது
எல்லாம் உணர்ந்த மனக்குகை..

சனி, 10 நவம்பர், 2012

குளிர்ப் பூ..

கரங்களோடு கரங்கள்
கோர்த்து  நடக்க
விரல்களில் இருந்து
உதிர்கிறது குளிர்..




வியாழன், 8 நவம்பர், 2012

பறக்கும் ஓவியம்.

சிதறும் வண்ணங்கள் சுமந்து
பறக்கும் ஓவியமாய்
உலாவருகிறது
பட்டாம்பூச்சி.

மயில்தோகை விசிறி.

தோகைகளாய் மாறினதும்
கண்கள் முளைத்தன.
பார்வையற்ற விழிகளோடு
உணர்கிறேன் உன்னைக்
காற்றாய் வருடி.

புதன், 7 நவம்பர், 2012

மீன்

அழகான ஜாடி
அது நிறைய தண்ணீர்
பசிக்குமுன்னே உணவு
துக்கமும் தூக்கமும் அறியாமல்
எதைத் தேடியோ
அலைந்துகொண்டிருக்கும் மீன்
Related Posts Plugin for WordPress, Blogger...