எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

கண்ணேறு

மஞ்சள் துகில் சரிகிறது
குட்டிச் சூரியன் எட்டிப்பார்க்க
துருவன் திருஷ்டிப் பொட்டிடுகிறான்.

மரங்கள் சாமரம் வீச
பறவைகள் கானம் இசைக்கின்றன
தவழும் சூரியன் ஏந்தி உருள்கிறது பூமி

மேகம்,மலை, மழையில் எல்லாம் சவாரி
வானவில்லிலும் கூட வழுக்கி இறங்குகிறான் சூரியன்
நீர்ச் சாரல்களை வழித்து முகம் துடைக்கிறது காற்று. 

செம்மாந்து நிற்கிறது வானம்
செங்காந்தள் விரல்களால் சூரியனை ஏந்தி
ஆரத்திசுற்றிக் கண்ணேறு கழிக்கிறது இரவு.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...