எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

வயல் கம்பளம். :-

வயல் கம்பளம். :-

மேகப்பஞ்சு அவிழுது
மழை நூலை உதிர்க்குது
நீர்ப்புடவை நெய்யுது
மின்னல் சரிகை சேர்க்குது
இடியும் தறிபோல் இடிக்குது
இருண்ட மேகம் வெளுக்குது
சூரியன் எட்டிப் பார்க்குது
வானவில் வண்ணம் அடிக்குது
வானம் வெள்ளரிச்சுப் போனது
வயல் பச்சைக் கம்பளம் ஆனது
நெய்து முடித்த களிப்பில் மேகம்
நிர்மலமா நகர்ந்து போகுது.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...