எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 29 செப்டம்பர், 2021

இனிது

உன் நினைவுகளில் 
நான் உறையும்போது
காலமும் உறைந்து விடுகிறது
கடிகாரத்தின் முட்கள்
என்னை உருக்கும்போது
ரோஜாக்களாய் நிரம்பிக்
கிடக்கிறது உன் ஞாபகம்.
எவ்வளவு மறைத்தும்
என் முகம் வழி
பூத்து விடுகிறாய் நீ.
கசியும் காற்றில்
உன்னை முகர்கிறேன்.
நீயாக நுழைந்து
நானாக மாறிவிடும்
உன் வாசனைகளுடன்
வாழ்வது இனிது.

 

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

பழக்கதோஷம்

மரங்கள் காத்திருக்கின்றன
பறவைகள்தான்
ஓய்வெடுக்க நேரமில்லாமல்
உணவுத் தேட்டையில்.
கூடுகளில் முட்டைகள்
தாமே பொறிந்து வருகின்றன
சிறு சிறகு கோதி
விழுந்தெழுந்து தாமே பறக்கக் கற்கின்றன
குஞ்சுகள் பறந்தபின்னும்
தாய்ப்பறவைகள்
பழக்கதோஷத் தேட்டையில்
பறந்துகொண்டே இருக்கின்றன. 

 
Related Posts Plugin for WordPress, Blogger...