எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 18 நவம்பர், 2015

சத்தங்களற்ற சந்தி :-

எப்போதோ உதிர்ந்துவிடும் என்றாலும்
எப்போதும் உதிர்வதில்லை ஒரு பூ.


மலர மலரச் சிரித்துக் கொண்டே
தனக்கு விருப்பமான அந்தியில்
குலுங்கும் இலைகளசைய
காற்றைப் பிடித்திறங்கி
ஏங்கிக்கிடக்கும் மண்ணை
முத்தமிட்டு எச்சிலாக்குகிறது அது.


சத்தங்களற்ற சந்தியில்
சருகுகள் அசைத்துச் சிரிக்கிறது காற்று.


காட்டுக் கொடிகள் பிரித்து
வெள்ளிப்பாய் விரிக்கிறது நிலவு.


துருவனுக்கு வாசனைக் கரம்நீட்டி
வெளுப்பாகிக்கொண்டிருக்கிறது பூ..



5 கருத்துகள்:

thenmozhirajagopal சொன்னது…

ஆகா....அருமை

thenmozhirajagopal சொன்னது…

ஆகா....அருமை

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி டிடி சகோ

நன்றி தேனு

நன்றி சுரேஷ் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...